நாகப்பட்டினம், ஜூன் 13-
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக ரமேஷ் பொறுப் பேற்று கொண்டார். இவர் இதற்கு முன்பு நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை தனி வட்டாட்சியராக (நிலம் எடுப்புப் பிரிவு) பணியாற்றி வந்தார். இங்கு வட்டாட்சியராகப் பணி யாற்றிய ரமேஷ்குமார் கீழ்வேளூர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.