districts

காசவளநாடு தெக்கூரில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா

தஞ்சாவூர், ஜூன் 12-

     காசவளநாடு தெக்கூரில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    தஞ்சாவூர் அருகே காசவளநாடு தெக் கூர், கருக்காக்கோட்டை, நாட்டரசன் கோட்டை, பஞ்சநதிக்கோட்டை, நடூர் ஆகிய  பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் விளைவிக்கப்படும் நெல்லை, அருகருகே உள்ள கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.

    காசவளநாடு தெக்கூரில் நெல் கொள் முதல் நிலையம் இல்லாததால் இவ்வூர் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். இதை யடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கள், மாவட்ட நிர்வாகத்திடம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற நிர்வாகம் உடனடியாக  காசவளநாடு தெக்கூரில் ரூ.60 லட்சம் செல வில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நிதியை ஒதுக்கீடு செய்து உத்த ரவை வழங்கியது.

   இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காச வளநாடு தெக்கூரில் நிரந்தர நெல் கொள் முதல் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல்  நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு ஒரத்த நாடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் எம்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய திமுக செயலா ளர் கு.செல்வராஜ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி தர்மராஜ் மற்றும் காச வளநாடு தெக்கூர் கிராமத்தைச் சேர்ந்த விவ சாயிகள் பலர் கலந்து கொண்டனர்.