districts

img

ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக நீதிமன்றம் தடை ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி, மார்ச் 27 - ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்தும் உச்சநீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பை ரத்து செய்ய கோரியும், இதற்கு காரணமான ஒன்றிய பாஜக அரசை கண்டித் தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொன்னமராவதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.பக்ரு தீன் தலைமையில், திமுக, காங்கிரஸ், சிபிஐ,  விசிக, எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப்  இந்தியா, திராவிடர் கழகம், மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட  அனைத்து கட்சியினர், அனைத்து ஜமாத் கூட்ட மைப்பின் சார்பாக பொன்னமராவதி பேருந்து  நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமுஎகச மாநில செயற்குழு உறுப்பி னர் கவிஞர் நா.முத்துநிலவன் கண்டன உரை யாற்றினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.