தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் பாபநாசம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மூலம் பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்வில், பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல் கனி, பாபநாசம் அரசு மருத்துவமனை சித்தா மருத்துவர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.