திருச்சிராப்பள்ளி, ஜன.28- திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, ஜமால் முகமது கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் காவல் துறையினர் இணைந்து திருச்சி கே.கே.நகர் பகுதியில் சனிக்கிழமை பார்வை இழப்பு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடந்தினர். நாடகத்தை திருச்சி காவல் ஆணையர் சத்யபிரியா தொடங்கி வைத்தார். ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரதிபா முன்னிலை வகித்தார். ஜமால் முகமது கல்லூரி முதல்வர் இஸ்மாயில் மைதீன், செயலாளர் காஜா மொய்தீன் மற்றும் திருச்சி காவல்துறை உதவி ஆணையர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். வீதி நாடகம் திருச்சி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் இந்த வாரம் முழுவ தும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடு களை ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அலுவலர் சுபாபிரபு மற்றும் திருச்சி காவல்துறை நவநீதகிருஷ்ணன் ஆகியோர் செய்தனர்.