districts

img

பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்குக!

அரியலூர், பிப்.5- அரியலூர் மாவட்டம், தா.பழூர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் திங்கள்கிழமை மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் தலைமையில், மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் அளித்த மனுவில், “தா.பழூரில் குடிமனைப் பட்டா இல்லாமல் பட்டியலின மக்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். அவர்களால் அரசாங்க சலுகைகள் பெற முடியாத நிலை உள்ளது. ஆகவே அவர்களுக்கு இலவச பட்டாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் சா.சி.சிவசங்கர், பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.