districts

img

கலைத்தட்டு உற்பத்தியாளர்களுக்கு புவிசார் அங்கீகாரச் சான்று வழங்கல்

தஞ்சாவூர், டிச.30- தஞ்சாவூர் கலைத்தட்டு உற்பத்தியாளர்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் கலைத் தட்டுக்கு புவிசார் குறியீடு கடந்த 2007-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த கலைத்தட்டு உற்பத்தி செய்யும் ஒவ்வொருவரும் தனித்தனியாக அதற்கான சான்றிதழை பெற வேண்டும் என சட்ட விதி இருப்பதால், இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் இந்த புவிசார் குறியீடு அங்கீகாரச் சான்றை பெற்றுள்ளனர். இதையடுத்து தஞ்சாவூரில், தஞ்சாவூர் கலைத்தட்டு உற்பத்தி செய்யும் கைவினை கலைஞர்கள் 27 பேருக்கு அங்கீகாரச் சான்று வழங்கும் நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு கைவினைக் கலைஞர் ராஜா தலைமை வகித்தார். இதில் 27 பேருக்கு புவிசார் குறியீடு அங்கீகாரச் சான்றை தமிழக அரசின் புவிசார் குறியீடு வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி வழங்கினார். முன்னதாக, தஞ்சாவூர் மாவட்ட கலைத் தட்டு தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ப.சஞ்சய்காந்திக்கு, இந்தியாவின் தலைசிறந்த புவிசார் குறியீடு வழக்கறிஞருக்கான விருது வழங்கப்பட்டது.