தஞ்சாவூர், ஜன. 4- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மழையி லும், வெயிலிலும் கிடந்து இரும்பு பொருட் கள் வீணாகி வருகின்றன. தமிழக அரசின் வீடு கட்டும் திட்டம், அதேபோல் ஒன்றிய அர சின் வீடு கட்டும் திட்டங்கள் ஆகியவற்றுக்கு, பயனாளிகளுக்கு இரும்புக் கதவுகள், இரும்பு ஜன்னல்கள் ஆகியவை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் வழங்கப்படுகின்றன. அவ்வாறு பயனாளிகளுக்கு கொடுப்ப தற்காக, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பாதுகாப்பற்ற முறையில் திறந்த வெளியில் இரும்புக் கம்பிகள், இரும்பி னால் ஆன நிலை, கதவு, ஜன்னல்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பற்ற முறையில் மண் தரையில் இவை வைக்கப் பட்டுள்ளன. தற்போது தொடர் மழை பெய்து வரும் நிலையில் இந்த இரும்புக் கதவுகள், ஜன்னல்கள், மழையிலும் பணியிலும் கிடந்து வீணாகி துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்துவிட்டன. அதிகாரிகள் யாரும் இதனை கண்டு கொள்வதில்லை. பயன்படுத்த முடியாத துருப்பிடித்த நிலையில் உள்ள இந்தப் பொருட்களை பயனாளிகளின் தலையில் அதி காரிகள் கட்டிவிடும் வாய்ப்பு உள்ளது. பல லட்சக்கணக்கான மதிப்பில் உள்ள இந்த இரும்பு பொருட்கள் அதிகாரிகள் அலட்சியத் தால் வீணாகி வருகிறது. எனவே இவற்றை முறையாக பாதுகாத்து பயனாளிகளுக்கு வழங்க அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் வலியுறுத்தியுள்ளனர்.