பேராவூரணி, பிப்.1- நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த, மீன்பிடி விசைப்படகுகள், தஞ்சாவூர் மாவட்ட கடல் பகுதியில், வாரம் முழு வதும் தங்கி மீன்பிடி தொழில் செய்வதால், மீன்வளம் பாதிக்கப்படுவதோடு, தஞ்சா வூர் மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடி வலைகள் சேதமாகிறது என்றும் வெளிமாவட்ட மீனவர்களால், மீன்பிடித் தொழில் மற்றும் மீனவர்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்படுகிறது என தஞ்சாவூர் மாவட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் அதிகாரிகளுக்கு புகார் தெரி வித்தனர். இந்நிலையில், மல்லிப்பட்டினம் மீன் பிடித் துறைமுகத்திலிருந்து, 2 விசைப் படகு களில், மீன்வள ஆய்வாளர் ஆனந்தன் மற் றும் மீனவர்கள் தஞ்சை மாவட்ட கடல் பகுதி யில் சுமார் 1.5 நாட்டிக்கல் மைல் தொலை வுக்கு ஆய்வு மேற்கொண்டனர். இதில், முத்துப்பேட்டை வாய்க்கால் அருகே காரைக்காலைச் சேர்ந்த விசைப்பட கின் உரிமையாளர் உதயகுமார் மற்றும் தொழிலாளர்கள் 9 பேர் 2 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது காரைக்கால் மீனவர்கள் மீன்பிடி வலைகளை அறுத்துவிட்டு, ஆய்வுக் குழு வந்த படகு மீது மோதி சேதம் விளைவித்து விட்டு தப்பி் செல்ல முயன்ற னர். ஆய்வுக்குழு படகில் இருந்த மீன வர்களின் உதவியோடு அந்த 2 விசைப்படகு களையும் பறிமுதல் செய்து மல்லிப்பட்டி னம் துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள படகுகளில் சுமார் 2 டன் மீன்கள் இருந்தன. மேலும் விசைப்படகின் வீல் ஹவுஸ் பூட்டி வைக்கப்பட்டு படகின் சாவி மல்லிப்பட்டினம் மீன்வள ஆய்வாளர்களி டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.