districts

img

ஒருங்கிணைந்த பேருந்து முனைய கட்டுமானப் பணி: அமைச்சர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி, டிச.11- திருச்சி மாநகராட்சிக் குட்பட்ட பஞ்சப்பூரில் புதி தாக அமைய உள்ள ஒருங்கி ணைந்த பேருந்து முனையத் தின் கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஞாயிறன்று நேரில் ஆய்வு செய்தார். பஞ்சப்பூரில் ஒருங்கி ணைந்த பேருந்து முனையம் கட்டும் பணி, பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம்  ரூ.243.78 கோடி, கனரக  சரக்கு வாகன முனையம் கட்டுமானப் பணி மற்றும் சாலைகள், மழைநீர் வடி கால் மற்றும் உள்கட்ட மைப்பு வசதிகள் ரூ.106.20 கோடி என மொத்தம்  ரூ.349. 98 கோடி மதிப்பீட்டில் கட்டு மானப் பணிகள் நடை பெற்று வருகின்றன. இங்கு பல்வகை பயன்பா டுகள் மற்றும் வசதிகளுக் கான மையம், கனரக சரக்கு  வாகன முனையம், தங்குமிட  வசதி, உணவக கட்டிடம் ஆகியவை அமைய உள்ளன. சாலைகள், மழைநீர் வடி கால் மற்றும் உட்கட்ட மைப்பு வசதிகள், சிமெண்ட்  கான்கிரீட் சாலைகள், ஒருங்கிணைந்த பேருந்து முனைய பகுதியில் பசுமை பரப்பு, மின்வசதி, குடிநீர் வசதி மற்றும் மழைநீர் வடி கால் செல்லும் வசதி ஆகி யவை அமையவுள்ளன.  ஆய்வின்போது, மாநக ராட்சி ஆணையர் வைத்திய நாதன், நகரப் பொறியாளர்  சிவபாதம் மற்றும்  அலுவ லர்கள் உடனிருந்தனர்.