districts

img

மேலப்பாதி-செம்பனார்கோவில் இணைப்புச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

மயிலாடுதுறை, மே 28-

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் பகுதி யையும் மேலப்பாதி பகுதி கிராமங்களையும் இணைக்கும்  சாலை ஆறு ஆண்டுகளாக குண்டும்-குழியுமாக உள்ளது.  இந்தச் சாலையைப் பயன்படுத்தும் கருவாழக்கரை, மருதூர், மேலப்பாதி, கீழப்பாதி ,கஞ்சாநகரம், நடுக்கரை உள்ளிட்ட கிராமமக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். இந்தச் சாலையை சீரமைக்கவேண்டுமென மார்க்சிஸ்ட்  கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர்  கே.பி.மார்க்ஸ் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி யுள்ளார்.