நாகர்கோவில், ஜூன் 9
குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவ தும், ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழுந்து கடலரிப்பு ஏற்படுவதும் வழக்கம். கடந்த 1-ந்தேதி முதல் மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல வில்லை. ஆனால் பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் வழக்கம்போல் மீன் பிடித்து வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. இத னால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழுந்து சென்றது. இந்த அலை வெள்ளத்தால் துறைமுக பழைய பாலத்தின் தூண் பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் குவிந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட கடலரிப்பு பகு தியில் மணல் திட்டு உருவாகி உள்ளது.
குளச்சல், கொட்டில்பாடு சுற்று வட்டார பகுதிகளில் கடல் சீற்றமாக காணப் பட்டது. இதனால் மணல்பரப்பில் நிறுத்தப் பட்ட பைபர் வள்ளங்களை மீனவர்கள் பாது காப்பாக வேறு இடத்திற்கு கொண்டு சென்ற னர். ஆனால் விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் தொழில் பாதிப்பில்லாமல் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றன.