districts

விபத்தில் அக்குபங்சர் மருத்துவர் பலி

தேனி:

     திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி நல்லகண்ணு தெருவை சேர்ந்தவர்  அருண்குமார்(37). இவர் அக்குபங்சர் டாக்டராக வேலைபார்த்து வந்தார். தற்போது இவர்  தனது குடும்பத்துடன் ஆண்டிபட்டி அருகில் உள்ள ஜக்கம்பட்டி செல்வவிநாயகர் நகரில்  வசித்துவந்தார். சம்பவத்தன்று திருச்சியில் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிப் பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். வத்தலக்குண்டு டூவிலர் ஸ்டாண்டில்  பைக்கை நிறுத்திவிட்டு திருச்சி சென்றார். மீண்டும் திரும்பிவந்து பைக்கை எடுத்துக் கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். தேவதானப்பட்டி-ஆண்டிபட்டி சாலை யில் திடீரென பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.