தஞ்சாவூர், ஏப்.30-
தஞ்சாவூரில் மின் இணைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு, ரூ.82 ஆயிரத்து 781 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மானக் கழகத்தின் தஞ்சாவூர் நகரியச் செயற்பொறியாளர் ம.மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தஞ்சாவூர் நகரிய அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதி களில் மாதாந்திர கூட்டுக் குழுக்கள் கடந்த சிலநாட்களாக ஆய்வு செய்தன. இதில், 971 மின் இணைப்புகள் ஆய்வு செய் யப்பட்டன. அப்போது, ஐந்து மின் இணைப்புகள் தவ றாகப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு, அபராத மாக ரூ.82 ஆயிரத்து 781 வசூல் செய்யப்பட்டது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.