கரூர், ஏப்.17-
ஈரோடு மாவட்டம், வடக்கு புதுப்பாளையத்தை சேர்ந்த வர் கருப்பண்ணசாமி (70). இவர் விவசாய வேலை செய்துவருகிறார்.
இந்நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமை யான காய்ச்சல் இருந்துள்ளது. இதனால், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரக தொற்று இருப்ப தாகக் கூறி தீவிர சிகிச்சை அளிக்க துவங்கினர்.
இதனால், மனமுடைந்த கருப்பண்ணசாமி பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பசுபதிபாளையம் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.