கும்பகோணம், மார்ச் 6- கூட்டுறவு சங்கங்களில் தேங்கிக் கிடக்கும் பட்டுச் சேலைகளுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அறிவித்து விற்பனை செய்யக் கோரி நெசவா ளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் அருகே உள்ள திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் தேங்கியுள்ள பட்டு சேலைகளுக்கு 30 சதவீதம் நிபந்தனை யின்றி அரசு தள்ளுபடி மானியம் வழங்க வேண்டும். கோ ஆப்டெக்ஸ் மூலம் தேங்கிக் கிடக்கும் பட்டு சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டும். சங்கத்திற்கு நிரந்தர மேலாண்மை இயக்குநரை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர்களின் கூட்ட மைப்பு சார்பில் திருபுவனத்தில் நூதன காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர் எம்.பி.நாராயணன், சிஐடியு தலைவர் பக்கிரிசாமி, ஏஐடியுசி தலைவர் மணி மூர்த்தி ஆகியோர் தலைமை வகித்த னர். தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கள் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் நாகேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் சா.ஜீவபாரதி உட்பட திருபுவனம் நெசவாளர்கள் கூட்ட மைப்பு சார்பில் ஏராளமான நெசவா ளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் திருபுவனம் கடை வீதியிலிருந்து நெசவாளர்கள் அரை நிர்வாணத்துடனும், பஜனை பாடி கொண் டும் ஊர்வலமாக வந்து, உதவி இயக்கு நர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட் டம் செய்தனர். பின்பு, கைத்தறி கூட்டுறவு சங்க இணை இயக்குநர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, “கோரிக்கைகளை சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி தமிழக அரசு அனுமதியுடன் கோரிக்கை நிறை வேற்றப்படும்” என உறுதியளித்தார். இதன்பேரில் போராட்டம் தற்காலிக மாக ஒத்திவைக்கப்பட்டது.