districts

img

செந்துறை வட்டச் செயலாளராக கு.அர்ச்சுனன் தேர்வு

அரியலூர், அக்.13 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் செந்துறை 9 ஆவது  வட்டக் குழு மாநாடு ஒன்றிய  குழு உறுப்பினர் வி. அண்ணாதுரை, ஜி.செண்ப கவல்லி தலைமையில் நடை பெற்றது.  மாநாட்டுக் கொடியை டி.கருப்பையா ஏற்றி வைத் தார். மாநாட்டு துவக்க உரையை மாநிலக் குழு  உறுப்பினர் எஸ்.வாலண்டினா  தொடங்கி வைத்தார். கட்சி யின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஏ. கந்தசாமி ஆகியோர்  மாநாட்டை வாழ்த்தி பேசி னர்.  புதிய வட்டக் குழு நிர்வா கிகள் 9 பேர் தேர்வான நிலையில், வட்டத்தின் செய லாளராக கு.அர்ச்சுனன் தேர்வு செய்யப்பட்டார்.  செந்துறை வட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லாததால் சிறுநீரக கோ ளாறு மற்றும் தொற்று நோய் ஏற்படுகிறது. எனவே,  பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க கொள்ளிடம் கூட்டுக்  குடிநீர் திட்டத்தை செயல் படுத்த வேண்டும். செந் துறை நகரத்தில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க வேண்டும். செந்து றையில் முந்திரி விவசாயம் பிரதானமாக இருப்பதால் முந்திரி பயிரை பயிர் இன்சூ ரன்ஸ் திட்டத்தில் சேர்க்க  வேண்டும். செந்துறை பகுதி யில் முந்திரி தொழிற்சாலை அமைத்து அனைவருக்கும் வேலைவாய்ப்பை உரு வாக்க வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. உறுப்பினர் பி. கண்ணன் நன்றி கூறினார்.