பெரம்பலூர், ஜூன் 21 -
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 23.6.2023 அன்று காலை 11 மணியளவில் பெரம்ப லூர் மாவட்ட ஆட்சியரக கூட்டமன்றத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளா ண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயி கள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்க லாம் என மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.