தஞ்சாவூர், நவ.24- மக்கள் விரோத ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து நவ.26,27 தேதிகளில் நடைபெற வுள்ள சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை விளக்கி, அனைத்து தொழிற்சங்கங் கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், தஞ்சையில் பல்வேறு இடங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை முன்பு சனிக்கிழமை பிரச்சார இயக்கம் துவங்கியது. கரந்தை, பள்ளியக்ரஹாரம், நிக்கல்சன் வங்கி, பழைய பேருந்து நிலையம், அரசு விரைவு போக்குவரத்து கழக பணி மனை, ரயிலடி, காவேரி சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. இயக்கத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால், தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் என்.மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜன், ஐக்கிய விவசாய முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட சங்கங் களைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.