districts

img

தேங்காய்க்கு நல்ல விலை வேண்டும் தென்னை விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

தஞ்சாவூர், ஜூலை 23 -

      பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி, தென்னை விவசாயி கள் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை, பேராவூரணி, சேதுபா வாசத்திரம், ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில், சுமார் 1.20 லட்சம்  ஏக்கரில், தென்னை சாகுபடி செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் கஜா புயலுக்கு பிறகு, தென்னை சார்ந்த தொழில்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. தேங்காய் விலை வீழ்ச்சியால், தென்னை விவ சாயிகளின் வாழ்வாதாரம் மிகப் பெரியளவில் பாதிக்கப்பட்டது. தற்போது, ஒரு தேங்காய் வெறும் 8 ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படு கிறது. தென்னை விவசாயிகளுக் கான பிரச்சனைகளை ஒன்றிய- மாநில அரசுகள் கண்டு கொள்ள வில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இந்நிலையில், தென்னை விவ சாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமான தேங் காய்க்கு நல்ல விலை கிடைக்கவும், தேங்காய் எண்ணெயை மக்கள் பயன்படுத்த அரசு ஊக்குவிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வரு கின்றனர்.

    அதனொரு பகுதியாக, பேரா வூரணியில் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்ட் - கோஸ்ட் தென்னை விவசாயி கள் சங்கத்தினர் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில், பேராவூரணி, பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், ஒரத்த நாடு, புதுக்கோட்டை உள்ளிட்ட  பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு ஈஸ்ட் - கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்க தலைவர் இ.வீ.காந்தி தலைமை வகித்தார். இதில் சிறப்பு  விருந்தினராக, பேராவூரணி சட்டப் பேரவை உறுப்பினர் நா.அசோக் குமார், கள் இயக்க ஒருங்கி ணைப்பாளர் ஈரோடு செ.நல்ல சாமி, முன்னாள் எம்.எல்.ஏ,வும்,  திரைப்பட நடிகருமான கருணாஸ்,  கடலூர் மாவட்ட முன்னாள் ஆட்சி யர் அன்புசெல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில், வெளிநாடு களிலிருந்து இறக்குமதி செய்யப் படும் பாமாயிலை தவிர்த்து, தென்னை விவசாயிகளுக்கு நன்மை தரும் வகையில் தேங்காய் எண்ணெயை ரேசன் கடைகளில் விநியோகிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் காலை, மதியம் சத்துணவில் தேங்காய் எண்ணெயே பயன் படுத்த வேண்டும்.

     பேராவூரணி பகுதியில் தென்னையின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில், தொழிற்பேட்டையை உருவாக்க வேண்டும். தென்னை சார்ந்த உற்பத்தி பொருட்களின் உள்நாட்டு விற்பனைக்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வ தற்கும் அரசு உதவி செய்ய வேண்டும்.

       கேரள அரசு கூட்டுறவுத்துறை மூலம் உரித்த தேங்காய்களை விவ சாயிகளிடம் வாங்குவது போல், தமிழகத்தில் ஒரு கிலோ தேங்காயை  40 ரூபாய்க்கு அரசு கொள்முதல் செய்ய வேண்டும். ஒன்றிய அரசு, விவசாயிகளிடமிருந்து வரும் அனைத்து கொப்பரைகளையும், ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்வதுடன், கொள்முதல் விலையை ஒரு கிலோ 140 ரூபாய்  உயர்த்தி வழங்க வேண்டும்.  

     தென்னை வளர்ச்சி வாரியத் தின் தமிழ்நாட்டிற்கான துணை அலு வலகத்தை, தஞ்சாவூரில் அமைக்க  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.