திருச்சிராப்பள்ளி, ஜன.8- தாட்கோ நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக சுயவேலை வாய்ப்பு திட்டங் கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இலவ சமாக விவசாய டிரோன் கருவி பயிற்சி மாணவர் களுக்கு அளிக்கப்பட உள்ளது. 18 முதல் 45 வயதுக்குட் பட்ட பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப் படிப்பு, பொறியியல் பட்டப் படிப்பு படித்த ஆதிதிரா விடர், பழங்குடியின பிரிவை சேர்ந்த மாணவ, மாணவி கள், திருநங்கைகள் இப்ப யிற்சிக்கு விண்ணப்பிக்க லாம். ரூ.61,100 மதிப்புள்ள இந்தப் பயிற்சி கட்டணத்தை தாட்கோ நிறுவனம் முழு மையாக ஏற்கிறது. 10 நாட்கள் அளிக்கப்படும் இப்பயிற்சியில் கலந்து கொள் பவர்களுக்கு தங்கும் இடம், உணவு இலவசம். பயிற்சியை முழுமை யாக நிறைவு செய்பவருக்கு அடுத்த 10 ஆண்டுகளுக் கான அங்கீகரிக்கப்பட்ட டிரோன் ரிமோட் பைலட் உரி மம் வழங்கப்படும். விவசாயத் துறையில் பூச்சி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணி களுக்கு டிரோன்கள் பயன் படுத்தப்படுகிறது. பயிற்சி முடித்தவர்கள் சொந்தமாக அல்லது தாட்கோ நிறுவனத் தின் உதவியோடு டிரோன் கருவியை வாங்கிப் பயன் படுத்தலாம். தாட்கோவின் தொழில்முனைவோர் திட்டத் தின் கீழ் வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்ச மாக ரூ.2.25 லட்சம், இதில் எது குறைவோ அதை மானி யமாக பெற்று மீதமுள்ள தொகையை வங்கிக் கட னாக பெற்று டிரோன் கரு வியை வாங்கிப் பயன்படுத்த லாம். தாட்கோ இணைய தளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரி வித்துள்ளார்.