திருத்துறைப்பூண்டி, மார்ச் 4 - திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலத்தில் அந்திய அரசின் மாற்றுத்திற னாளிகள் மேம்பாட்டுத் துறை மற்றும் சமூக நீதி அதிகாரம் அளிக்கும் அமைச்சகத்தின் சார்பில் பட்டியலின பழங்குடி இனத்தவர்களுக்கான முதன்மைத் திட்ட பயிற்சி முகாம் நெடும்பலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை யாசிரியர் தங்கராசு தலைமை வகித்தார். சென்னை முட்டுக் காடு மத்திய அரசின் ப ல்வகை மாற்றுத் திறனாளி களுக்கான தேசிய நிறுவனத் தின் நோடல் ஆபீசர் டாக்டர் தனவேந்தன் பயிற்சியை தொடங்கி வைத்து பேசி னார். இம்முகாமில் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு நிபுணர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். சாதிய வன்கொடுமை தடுப்பு முறைகள், மருத்துவ பயிற்சிகள், ஆரம்ப கால ஊணங்களை சரியாக்குதல், குழந்தை வளர்ப்பு, ஆதி திராவிடர்களுக்கு பாது காப்பு சட்டங்கள், பொருளா தார மேம்பாடு அடைவதற்கு கல்வி ஒன்றே ஆயுதம் என பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அரசு தாயுமானவன், உளவி யல் நிபுணர் அக்பர், சிறப்பா சிரியர் சுகுமார், பட்டதாரி ஆசி ரியர்கள் கருத்துரை வழங்கி னர். பயிற்சியில் கலந்து கொண்ட 50 மாணவ-மாணவி களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.