districts

திருச்சி முக்கிய செய்திகள்

தீ தொண்டு நாள் விழிப்புணர்வு

பொன்னமராவதி, ஏப்.14 - புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி தீய ணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் பணியின்போது, உயிரி ழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வித மாக ஒவ்வொரு ஆண்டும்  தீ தொண்டு நாள் கடைப் பிடிக்கப்படு கிறது. தீயணைப்பு நிலையத் தில் உள்ள நீத்தார் நினைவுச் சின்னத்தில் நிலைய அலுவலர் மணி கண்டன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத் தினார். மேலும் தீய ணைப்பு வீரர்கள் நீத்தார் நினைவுச் சின்னத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  இதனையடுத்து தீ பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காந்தி சிலையிலிருந்து அண்ணா சாலை வழியே ஊர்வலமாக வந்து பேருந்து நிலையத்தில் நிறைவு செய்தனர். இதில் தீ விபத்து நிகழும் போது முன் தடுப்பு நடவ டிக்கையாக எவ்வாறு செயல்பட வேண்டும், தீ விபத்து மற்றும் பாம்பு, மாடு, ஆடு, ஏதேனும் விபத்து என்றால் அவசர அழைப்பு எண்கள் 101, 04333262088, 9445086460 ஆகிய எண்கள் மூலம் தீ கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண் டும் என்ற துண்டுப் பிர சுரங்களை பொது மக்க ளுக்கு வழங்கினர்.

ஈச்சங்குடியில்  ரூ.53,890 பறிமுதல்

பாபநாசம், ஏப்.14 - திருவையாறு - கும்ப கோணம் மெயின் சாலை யில் அய்யம் பேட்டை அருகே ஈச்சங்குடியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது திருவையாறைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வந்த பைக்கை சோதனையிட்டதில், அவ ரிடம் ரூ.53,890 பணம் இருந்த நிலையில், அதற்குரிய ஆவணம் இல்லை. இதனால் பணத்தை பறிமுதல் செய்த குழுவினர், அதை தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும்  அலுவலர் முத்துகிருஷ் ணன், தாசில்தார் மணி கண்டனிடம் ஒப்படைத்த னர்.

நீலகண்டப் பிள்ளையார் கோவிலில்  கொடியேற்றம்

தஞ்சாவூர், ஏப்.14 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஏந்தல்  ஸ்ரீ நீலகண்டப் பிள்ளை யார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திரு விழா நடைபெறுவது வழக்கம்.  அதேபோல் இந்த ஆண்டு சித்திரைத் திரு விழா ஏப்.14 அன்று (ஞாயிறு) காலை 10:30  மணியளவில் கொடி யேற்றத்துடன் துவங்கி யது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப். 22 (திங்கள்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. பேராவூரணி மற்றும் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், சென்னை, மதுரை, கோவை, திருச்சி  போன்ற வெளியூர்களில் இருந்தும் வெளிநாடு களில் இருந்தும் இப்பகு தியைச் சேர்ந்த பொது மக்கள் தேரோட்ட தினத் திற்கு வந்து செல்வது வழக்கம்.  ஞாயிறன்று நடை பெற்ற சித்திரை திருவிழா கொடியேற்ற விழாவில் பேராவூரணி எம்எல்ஏ நா. அசோக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

உளுந்து பயிரின் மகசூலைப் பெருக்க ஒண்டர் கரைசல் தெளிக்கலாம்

பாபநாசம், ஏப்.14 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாரத்தில் கோடை உளுந்து 250 ஹெக்டேருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உளுந்து பயிர் பூக்கும் பருவத்தில் 30 மற்றும் 50 ஆம் நாள் டிஏபி இலை வழியாக உரம், பூக்களை அதிகப்படுத்துவதற்காக தெளிக்கப்படுகிறது.  இதற்கு மாற்றாக வேளாண்மைத் துறை மூலம் அட்மா திட்டத்தின்கீழ் பயறு ஒண்டர் வழங்கப்படுகிறது. இது பூக்கள் உதிர்வதை தடுத்து பூக்கும் திறனை அதிகரிக்கிறது. பயறு ஒண்டர் தெளிப்பதால், 20 சதவீத மகசூல் அதிகரிக்கிறது. வறட்சியைத் தாங்கி பயிர் வளர்வதுடன், பேரூட்டச் சத்துகள், நுண்ணூட்டச் சத்துகளும் பயிருக்கு கிடைக்கிறது.  ஏக்கருக்கு 20 கிலோ பயறு ஒண்டரை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து, கரைசல் தயாரித்து, டேங்கிற்கு ஒரு லிட்டர் பயறு ஒண்டர் கரைசலுடன், ஒன்பது லிட்டர் தண்ணீர் கலந்து, மாவிற்கு 7 டேங் என்றளவில் தெளிக்க வேண்டும். காலை, மாலை வேளைகளில் இலைத் துளைகள் திறந்திருப்பதினால், அந்நேரத்தில் பயறு ஒண்டர் தெளிப்பதால் நன்கு கிரகிக்கப்பட்டு, 4 மணி நேரத்தில் கரும் பச்சை நிறத்தில் மாறி ஒளிச் சேர்க்கை அதிகப்படுத்தப்படுகிறது.  இதனால் பயிர்கள், வேர்கள் மூலம் உறிஞ்சும் சத்துகள் அதிகரித்து வேர் முடிச்சுகள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இதன் விளைவாக பூக்களின் எண்ணிக்கை அதிகரித்து தேவையான நுண்ணூட்டச் சத்துகள் கிடைப்பதால் பூக்கள் கொட்டாமல் காய்களாக மாறும். இதன் மூலம் ஏக்கருக்கு நூறிலிருந்து 150 கிலோ மகசூல் அதிகமாக கிடைக்கும்.  பயறு ஒண்டர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் உற்பத்தி செய்யப்பட்டு, வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு வழங்கப் படுகிறது. பாபநாசம் வட்டாரத்தில் 10 விவசாயிகளுக்கு, பயறு ஒண்டர் வளர்ச்சி ஊக்கியை வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) மோகன் வழங்கினார்.

அஞ்சல் வாக்குச் சீட்டு குளறுபடிகளை உடனடியாக களைந்திடுக!

சிபிஎம் வலியுறுத்தல் புதுக்கோட்டை, ஏப்.14 - வாக்குச்சாவடிகளில் பணியாற்ற வுள்ள அலுவலர்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டு வழங்குவதில் உள்ள குளறுபடிகளை உடனடியாக சரிசெய்யு மாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.  இது தொடர்பாக கட்சியின் புதுக் கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகள், 4  மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டு  வருகிறது. இதில் சட்டமன்றத் தொகுதி வாரியாக 6 இடங்களில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் உள்ளவர்கள் சொந்த ஊருக்குச் சென்று வாக்க ளிக்க இயலாது என்பதால் தபால் வாக்குச் சீட்டு முறையில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதனடிப்ப டையில், சனிக்கிழமை பயிற்சி மையத் துக்கு வந்திருந்தோருக்கு வாக்குச் சீட்டு வழங்குவதில் பல்வேறு குளறுபடி கள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. உதாரணத்திற்கு 1,200 பேருக்கான பயிற்சி நடைபெறும் இடத்தில் சுமார் 900  பேருக்கு மட்டுமே அஞ்சல் வாக்குச் சீட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.  அதே நேரத்தில், ஏப்.14 (ஞாயிற்றுக் கிழமை) வரை மட்டுமே அஞ்சல் வாக்கு  செலுத்த முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வாக்களிப் பது வேறு யாருக்கும் தெரியக் கூடாது  என்ற நடைமுறைக்கு மாறாக, ஒரே  அறைக்குள் எந்த மறைப்பும் இல்லாமல்  சுமார் 30 பேர் வரை வாக்களிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. மேலும், பயிற்சியும் முறையாக நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.  வாக்குச்சாவடி தலைமை அலுவலராக இருக்க வேண்டியவர்கள், கீழ்உள்ள  அதிகாரிகளாகவும், ஏற்கனவே பல முறை வாக்குச்சாவடி தலைமை அலுவ லராகப் பணியாற்றியவருக்கு இந்த முறை (பி 3) வாக்குச்சாவடி அலுவலர்-3 என குறைவான பொறுப்பும் அளிக்கப் பட்டுள்ளதாகவும், எந்த அனுபவமும்  இல்லாதவருக்கு வாக்குச்சாவடி  தலைமை அலுவலர் பணி ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய குளறுபடிகளை எதிர்த்து திருமயம், இலுப்பூர் உள்ளிட்ட இடங்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் சாலை மறியல் போராட்டத்திலும், ஆலங்குடி யில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ள னர். மற்ற இடங்களில் பயிற்சி வகுப்புக்கு  வந்தவர்கள் வருவாய்த் துறை அலுவ லர்களிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டுள்ளனர். தலைமை தேர்தல் ஆணையர் நிய மனத்தில் இருந்து, வாக்குச்சாவடி அலு வலர் வரையிலான குளறுபடிகள் தொ டர்ந்து கொண்டே இருக்கிறது. ஜனநாய கத்தின் முக்கியத் தூணாக இருக்கும் தேர்தல் ஆணையத்தின் இத்தகைய குளறுபடிகள் மிகுந்த அதிர்ச்சி அடை யச் செய்துள்ளது. ‘இந்தியா’ கூட்ட ணிக்கு விழுகிற வாக்குகளை சீர்குலைக் கும் நோக்கில் இத்தகைய குளறுபடி கள் ஏற்படுத்தப்படுகிறதோ என்ற சந்தே கத்தை புறந்தள்ளிவிட முடியாது. உடனடியாக இத்தகைய குளறுபடி கள் சரிசெய்யப்பட வேண்டும். விடு பட்டுள்ள அனைவருக்கும் வாக்குச் சீட்டை உடனடியாக வழங்குவதற்கும், வாக்களிக்கும் நாளை தேர்தல் முதல்நாள்  வரை அவகாசம் தருவதற்கும் தேர்தல்  ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலைவிட இரண்டு மடங்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்! செல்வப்பெருந்தகை பேட்டி

புதுக்கோட்டை, ஏப்.14 - கடந்த தேர்தலைவிட தமிழ்நாட்டில் அனைத்துத் தொகுதிகளிலும் இரண்டு மடங்கு வித்தியாசத்தில் வெற்றி பெறு வோம் என்றார் காங்கிரஸ் கட்சியின்  மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை  எம்எல்ஏ. புதுக்கோட்டையை அடுத்த கட்டி யாவயலில் சனிக்கிழமை செய்தியாளர் களுக்கு அவர் அளித்த பேட்டியில், “ரூ.500 கோடி மோசடி புகாரில் சிக்கியுள்ள  சிவகங்கை பாஜக வேட்பாளர் குறித்து மோடி, அமித்ஷா, அண்ணா மலை ஆகியோர் பேசத் தயாரா?  பெரும்பாலான பாஜக வேட்பாளர்கள் இப்படியான பின்புலம் உள்ளவர்களாக வும், மக்களுக்கு எதிரானவர்களாகவும் உள்ளனர். தமிழ்நாட்டில் புறந்தள்ளப்பட்ட கட்சியாக பாஜக உள்ளது. அவர்க ளுக்கு வெறுப்பு அரசியலைத் தவிர வேறு எதுவும் தெரியாது. தேசத்தை அதானியிடம் அடகு வைத்துவிட்ட மோடிக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இதில் தமிழ் நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையே நடக்கக் கூடிய போர். இந்தப் போரில் மக்களுக்கு  முழுமையான பங்கு இருக்கிறது. அவர் கள் வெறுப்பை விதைக்கிறார்கள். நாங்கள் அன்பை மட்டுமே விதைக் கிறோம்.  பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் கொள்ளைப்புற வழியாக உறவு இருக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்க ளுக்கு தெரியும். அதனால், இருவரை யும் ஒருசேர மக்கள் ஒதுக்கித் தள்ளு வார்கள். 4 ரூபாய் வைத்திருப்பவர்களிடம் பெரிய சோதனை நடத்தப்படுகிறது. நயி னார் நாகேந்திரன் சம்பந்தப்பட்டவ ரிடம் 400 கோடி ரூபாய் பிடித்து ஒரு  வாரம் ஆகிறது. இதில் அமலாக்கத் துறையினர் இதுவரை எடுத்த நடவ டிக்கை என்ன? இன்னும் மோடியிட மிருந்து உத்தரவு வரவில்லையா என்று மக்கள் கேட்கிறார்கள். ஜனநாய கவாதிகளை சிதைப்பதும், பாசிஸ்டு களை வளர்ப்பது மட்டுமே பாஜக (மோடி) மாடல் ஆட்சி.  தங்கள் கட்சி போட்டியிடும் தொகுதி களைவிட தோழமைக் கட்சி வேட்பா ளர்களுக்கு கூடுதலாகவும், சிறப்பாக வும் திமுகவினர் பணியாற்றுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள  40 தொகுதிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக கண்கா ணித்து வருகிறார்.  ராகுல் காந்தியின் வருகையால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளதை பார்க்கிறோம். அனைத் துத் தொகுதிகளிலும் கடந்த தேர்தலை விட இரண்டு மடங்கு வாக்கு  வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்” என்றார்.