சின்னாளப்பட்டி, ஜன.19- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பேருந்து நிலையம் அருகில் முத்து ராஜ் என்பவருக்கு சொந்த மான பீரோ கம்பெனி உள் ளது. இந்த கம்பெனியில் பல வருடங்களாக பீரோவிற்கு பெயிண்ட் அடிக்கும் அறை யில் பெயிண்ட்டின் படிமங் கள் தேங்கி உள்ளது. இதனையடுத்து பொங் கல் விடுமுறை முடிந்து சனி யன்று பணிக்கு வந்த பணி யாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. கரும் புகைமூட்டத்துடன் குடோன் முழுவதும் தீவேகமாக பரவி பற்றி எரிந்தது. அறையின் மேற்கூரை முழுவதும் பெயர்ந்து விழுந் தது. விலை உயர்ந்த மேற் கூரை மர சாமான்கள் முழு வதும் தீயில் எரிந்து சாம்ப லாகியது.அருகில் இருந்த சேலை பிரிண்ட் பட்டறைக் கும் தீ பரவியதை அடுத்து, அவர்கள் உடனடியாக உள்ளே இருந்த சேலை களை அப்புறப்படுத்தினர். பணியில் இருந்த தொழி லாளர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப் பட்டது. தகவல் அறிந்து சம் பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆத்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரி கணே சன் தலைமையிலான தீய ணைப்பு வீரர்கள், வேகமாக செயல்பட்டு தீயை அணை த்து கட்டுக்குள் கொண்டு வந் தனர். இதனால் பெரும் அசம் பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீவிபத்து குறித்து சின் னாளப்பட்டி காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.