நன்னிலம், மே 30 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நன்னிலம் ஒன்றிய மாநாடு திங்களன்று பாவட்டக்குடியில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் எம்.ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் ஒன்றிய துணைத்தலைவர் எம்.கலியமூர்த்தி கொடியினை ஏற்றி வைத்தார். மாநிலத் தலைவர் வி.சுப்ரமணியன் துவக்கவுரையாற்றினார். சமூக செயற்பாட்டாளர் பேரா. மருதமுத்து ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநாட்டில் தலைவராக எம்.ராமமூர்த்தி, செயலாளராக தியாகு.ரஜினிகாந்த, பொருளாளராக எஸ்.தங்கராசு, துணை தலைவராக எம்.கலியமூர்த்தி, துணை செயலாளராக டி.பி.ராஜா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.