தஞ்சாவூர், டிச.31 - இயற்கை விவசாயத்தை எடுத்து ரைத்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ் வாருக்கு காவிரிக் கரையில் மணி மண்டபமும், அவரது பெயரில் வேளாண் பல்கலைக் கழகமும் அமைக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தமிழக முதல் வரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். தஞ்சாவூருக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழாவுக்கு வியாழக் கிழமை வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை, தஞ்சாவூர் மாவட்ட விவசாய பிரதிநிதிகள் நேரில் சந்தித்து, விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை எடுத்துக் கூறி அதற்கான கோரிக்கை மனுவை வழங்கினர். அப்போது முதல்வரிடம் விவசாயி கள் கூறுகையில், இயற்கை விவசா யத்தை விவசாயிகள் மத்தியில் பரவ லாக எடுத்துச் சென்று விழிப்பு ணர்வை ஏற்படுத்திய வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு காவிரிக் கரையில் மணிமண்டபமும், அவரது பெயரில் வேளாண் பல்கலைக் கழக மும் அமைக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் நேரில் ஆய்வு செய்து சென்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு ஏதும் அறிவிக்கப்பட வில்லை. எனவே முதல்வர் ஒன்றிய அரசிடம் கோரி, விவசாயிகளுக்கான நிவாரணத்தையும், இழப்பீடையும் பெற்றுத் தர வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் ஆறு, வாய்க்கால்கள் உள்ளன. ஆனால் பம்புசெட் மின் இணைப்பு பெற 200 மீட்டர் தூரத்துக் குள்ளாக ஆறு, வாய்க்கால் இருந் தால் மின் இணைப்பு பெற தடையாக உள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மின் இணைப்புக்காக பதிவு செய்துள்ளவர்களுக்கும், தக்கல் திட்டத்தில் பணம் செலுத்தி யுள்ளவர்களுக்கும், விவசாய பணி களுக்கு வீட்டு உபயோக மின் கட்ட ணம் செலுத்தும் முறையை நீக்கி, இலவச மின்சார திட்டத்தை வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் நிக ழும் முறைகேடுகளை களைந்து வெளிப்படையாக இணையதளம் மூலம் அறிவிக்க வேண்டும். அரசின் நிவாரணங்கள், மானியங்கள் பெறும் விவசாயிகளின் பட்டியலை இணைய தளத்தில் வெளியிட வேண்டும். அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை யில் எத்தனால் உற்பத்தியை தொடங்க வேண்டும். பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரியத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததற்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது, தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், விவசாய சங்க பிரதிநிதிகள் வீரசேனன், சுந்தர விமல்நாதன், வெ.ஜீவக்குமார், கோ விந்தராஜ், உள்ளிட்டோர் விவசாயி கள் சார்பில் முதல்வருக்கு தென்னங் கன்றுகளை பரிசாக வழங்கினர்.