அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த வள்ளிகாட்டில் வெள்ளிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, பொருளாளர் ஜெ.வைகைராணி, முன்னாள் மாவட்டச் செயலாளர் டி.சலோமி, ஒன்றியத் தலைவர் வி.கலைச்செல்வி, செயலாளர் ஷோபனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.