districts

திருச்சி முக்கிய செய்திகள்

திருச்சியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 14- திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில்  வெள்ளிக்கிழமையன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்பு களை வழங்கவுள்ளன. பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் (வயது வரம்பு: 18-க்கு மேல் 35-க்குள்) கலந்துகொள்ளலாம். மேற்படி நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்பு, நகல்கள் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தனி யார்துறை வேலைவாய்ப்பினை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசின் htÉs:~~www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து தனி யார்துறை வேலைவாய்ப்பினை பெற லாம். தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்புவோர் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்திற்கு நேரில் வருகைபுரிந்து பயன்பெறுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரி வித்துள்ளார்.

மார்ச் 22 பட்டுக்கோட்டையில் அஞ்சல் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், மார்ச் 14-  இந்திய அஞ்சல் துறை சார்பில் பட்டுக்கோட்டை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 22- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலாண்டு அஞ்சல் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது.  இதை முன்னிட்டு அனைத்து வகையான அஞ்சலக சேவைகள் சம்பந்தமான புகார்கள் மற்றும் குறைகள் ஏதும் இருப்பின் வருகிற 18-ஆம் தேதிக்குள் (திங்கட்கிழமை) பட்டுக்கோட்டை அஞ்சல் கண்காணிப்பாளருக்கு தபால் மூலம் தெரிவிக்க வேண்டும்.  எனவே, பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அஞ்சலக சேவைகள் சம்பந்தமான தங்களது கருத்துகளையும் குறைகளையும் தெரிவிக்கலாம் என்று  பட்டுக்கோட்டை அஞ்சல் கண்காணிப்பாளர் ரகுராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் குழுக்களுக்கு பயிற்சி

தஞ்சாவூர், மார்ச்.14 -  நாடாளுமன்ற பொது தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாகவும், தேர்தல் செலவின கணக்குகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் பயிற்சி தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலர் -  மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் புதன்கிழமையன்ற நடைபெற்றது.   இப்பயிற்சியில் பறக்கும் படை, நிலையான கண்கா ணிப்புக் குழு, வீடியோ கண்காணிப்புக் குழு, செலவு கணக்குக் குழு போன்ற அனைத்து குழுக்களுக்கு, தேசிய  அளவிலான சிறப்பு பயிற்சியாளரும், தஞ்சாவூர் தேர்தல் வட்டாட்சியர்- கலால் மேற்பார்வை அலுவலர் கி.கஜேந்தி ரன் பயிற்சி வழங்கினார். இப்பயிற்சியில், பல்வேறு குழுக்களை சேர்ந்த 132 நபர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாக ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தையல்நாயகி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூரில் ஒழுங்குமுறை விற்பனைக்  கூடங்களில் நிலக்கடலை ஏலம் விட நடவடிக்கை

தஞ்சாவூர், மார்ச்.14 -  தஞ்சாவூர் மாவட்டத் தில், நிகழாண்டு ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் மூலம் நிலக்கடலை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக, தஞ்சாவூர் மாவட்ட வேளாண் விற் பனைக்குழு செயலாளர் மா.சரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 6,540 ஏக்கர் பரப்பளவில் நிலக் கடலை சாகுபடி செய்யப் பட்டு, அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.   நிலக்கடலையை விற் பனை செய்வதில் சிரமம் இருப்பதாக விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், நிலக்கட லையை அதிகபட்ச விலை க்கு விற்பனை செய்ய ஏது வாக, வேளாண்மை விற் பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு உட்பட்ட தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும், தஞ்சாவூர், பூதலூர், வல்லம், ஒரத்த நாடு, பட்டுக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்ப னைக் கூடங்களில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட வணிகர்கள் மூலம் மறைமுக ஏலம் நடத்தி விற்பனை செய்துதர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விற்பனைக்கூட சேமிப்பு கிடங்குகளில் விளை பொருட்களை இருப்பு வைத்து, அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை பொரு ளீட்டுக் கடன் பெற்றுக் கொள்ளலாம். விற்பனைக் கூடங்களில் உள்ள உலர்களம், ஈரப்பதமானி, மின்னணு தராசு ஆகிய வசதிகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள லாம். மேலும், தேசிய மின் னணு வேளாண் சந்தை(e-NAM) திட்டத்தில் தங்களது விளைபொருட்களை விற்ப னைக்கு கொண்டுவரும் பட்சத்தில், வெளியூர் வணி கர்களை பங்குபெற செய்வ தன் மூலம் அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்து தரப்படும். கூடுதல் விவரங்களுக்கு ஒழுங்குமுறை விற் பனைக்கூட மேற்பார்வையா ளர்களை பூதலூர் - 7010154909, 9943928959, ஒரத்தநாடு - 8667006488, வல்லம் 8220927373, ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் களை தஞ்சாவூர் - 6380289219, பட்டுக்கோட்டை - 94871 09673 ஆகிய எண்களில் விவ சாயிகள் தொடர்பு கொள்ள லாம். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார். 

தஞ்சாவூரில் சிறப்பு மருத்துவ முகாம்

தஞ்சாவூர், மார்ச் 14- தஞ்சாவூர் மாவட்டம் அருங்காட்சியகம் வளாகத்தில் மருத்துவம்-மக்கள் நல் வாழ்வுத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண் காட்சியில் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமையன்று நடைபெற்றது.   இம்மருத்துவ முகாமினை தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தொடங்கி வைத்தார். இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட பத்தி ரிக்கையாளர்கள், பொதுமக்கள், குழந்தை கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.  இம்முகாமில் வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேஸ்வரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ. மதியழகன், உதவி மக்கள் தொடர்பு அலு வலர் (செய்தி) செ.கார்த்திக்ராஜ், மருத்து வர்கள், செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

போதை ஒழிப்பு கருத்தரங்கம்  

அரியலூர், மார்ச் 14-  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ரோட்டரி சங்கம் மற்றும் ரோட்ராக்ட் சங்கம் ஆகியவற்ற்றின் சார்பில்  போதை ஒழிப்பு  கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இரமேஷ் தலைமை  வகித்தார். ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர்  இராமராஜன் உரையாற்றினார். விழிப்புணர்வு ஊர்வ லத்தை  சங்க ஆளுநர் செந்தில்வேல் மற்றும் முன்னாள் தலைவர்  அன்புராஜ் ஆகியோர்   துவக்கி வைத்தனர். மாணவ, மாணவிகள் ,சமூக ஆர்வலர்கள், பேராசிரி யர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பூச்சிகளின் தாக்குதலை  குறைக்க கோடை உழவு அவசியம்

வேளாண் அதிகாரி விளக்கம்

தஞ்சாவூர், மார்ச் 14-  சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் பூச்சிகளின் தாக்குதலை குறைக்க கோடை உழவு அவசியம் என்று வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதியில் கோடை உழவிற்கு இதுவே ஏற்ற தருணம். அறுவடை செய்து தரிசாக கிடக்கும் நிலங்களை விவசாயிகள் கோடை உழவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முதலில் வயலை  இரும்புக் கலப்பை கொண்டோ அல்லது டிராக்டர் கொண்டோ குறுக்கும், நெடுக்குமாக ஆழமாக புழுதி உழவு செய்ய வேண்டும். இவ்வாறு கோடை உழவு மேற்கொள்வதால் புல், பூண்டுகள் வேர் அறுந்து கருகிவிடுகிறது. மண் பொளபொளப்பு தன்மை அடைகிறது.  பயிர் பருவகாலங்களில் சிலவகை பூச்சிகளின் புழுக்கள் மண்ணுக்குள் சென்று கூண்டுப் புழுக்களாக மாறி பேரிச்சங்கொண்ட போன்ற உருவத்தில் மண்ணுக்கடியில் வளர்ந்து கொண்டி ருக்கும். உழவு செய்வதன் மூலம் புழுக்கள் மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு அவை பறவைகளால் பிடித்து தின்று அழிக்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த பயிர் சாகுபடி யின்போது பூச்சிகளின் தாக்குதல் வெகு வாக குறைகிறது. களைச்செடிகள் முற்றி லும் அழிக்கப்படுகிறது.  மண்ணில் நீர்பிடிப்பு தன்மை பெறுகிறது. மண்ணின் பவுதீக தன்மை மேம்படுகிறது. நாற்றங் கால் மற்றும் நடவு வயல் தயாரிப்பு மிகவும் எளிதாகிறது. உரம் சமச்சீராக கிடைத்து வேர் வளர்ச்சி தூண்டப்படுவதுடன் பயிர் செழித்து வளர்கிறது. இதனால் மகசூல் கூடுதலாக கிடைக்கிறது.  அதே சமயம் மணல்சாரி களர் மற்றும் உவர் நிலங்களில்  கோடை உழவை தவிர்க்க வேண்டும். காரணம் கோடை உழவினால் மணல் சாரி நிலங்களில் ஈரத் தன்மை குறைகிறது. களர் மற்றும் உவர் நிலங்களில் நீர் ஆவியாகிவிடுவதால் உப்புத் தன்மை ஏற்படும் அபாயம் வரும். எதிர்வரும் கோடை காலத்தில் பெய்யக்கூடிய மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்வது நல்ல மகசூலை கொடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.