தஞ்சாவூர், ஆக.19 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் சங்கம் ஏற்பாட்டில், தமிழ்நாடு கிழக்கு மண்டல (தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவ கங்கை, புதுக்கோட்டை, நாகை) தென்னை விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் சங்கத் தலைவர் இ.வீ.காந்தி தலைமை வகித்தார். இதில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் வழக்குரைஞர் ஈசன் முருகசாமி, தமிழ்நாடு சிபிசி கான்சோரிடியம் செய லாளர் பி.செல்லத்துரை ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கூட்டத்தில், “தென்னைக்காக அரசு செலவிடும் நிதியை, அந்தந்த பகுதி தேங்காய் உற்பத்தி திறனுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் கொடுக்க வேண்டும். அகில இந்திய அளவில் உணவு எண்ணெயை அதி களவில் இறக்குமதி செய்யும் நிறுவ னங்களுக்கு, ஒன்றிய அரசு நமது சுதேசிப் பொருளான தேங்காய் எண்ணெயை 5 விழுக்காடு கொள்முதல் செய்து, விற்பனை செய்ய வேண்டும் என நிர்பந்தம் ஏற்படுத்த வேண்டும். உற்பத்தி செலவை விட, குறைந்த விலைக்கே தேங்காய் விற்பனை செய்யப் படுவதால், தென்னை விவசாயிகள் விரக்தி யில் உள்ளனர். எனவே, தென்னை விவசா யிகள் பிரச்சனைகளை தீர்க்க ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில், கிழக்கு கடற்கரைச் சாலை தென்னை விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் பி.கோவிந்தசாமி, ராமநாதபுரம் கதிரேசன், வெள்ளைச்சாமி, காரைக்குடி சண்முகம், சுந்தரம், வேலுச்சாமி, குழந்தை ராஜ், சந்திரமோகன், விஜய் ஆனந்த், வல்லரசு, ரமேஷ், முகமது சமீர், செந்தில் குமார், தணிகை மணி, ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.