தஞ்சாவூர், ஜன.2 - நாசா நிறுவனம் நடத்திய விண்கற்கள் கண்டறியும் ஆராய்ச்சியில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை சேர்ந்த ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்ற மாணவர் கள் மூன்று புதிய விண்கற் களை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி ஒன்றியத்தில் ஐன்ஸ் டீன் ஹாக்கிங் அறிவியல் மன்றம் விண்வெளி அறிவி யல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல் பட்டு வருகிறது. இந்த அறி வியல் மன்றம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கான விண்வெளி அறிவியல் சார்ந்த செயல்பாடு களை தொலைநோக்கி உள்ளிட்ட அறிவியல் கருவி கள் மூலம் பயிற்சி அளித்து வருகிறது. இந்த மன்றத்தின் ஒருங்கி ணைப்பாளர் தா.கலைச்செல் வன் மற்றும் மன்றத்தின் உறுப்பினர்களான பேராவூ ரணி அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் பி.எஸ்சி கணினி அறிவியல் துறை மாணவர்களான தி.ஷியாம், கு.பிரபாகர், பி.அகிலேஸ் வரன், ரா.சந்தியா, பிஎஸ்சி வேதியியல் துறை மாணவர் க.கோபாலன் ஆகியோர், நாசா (NASA) நிறுவனம் ஹார் டின் பல்கலைக்கழகம், ஹவாய் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்திய போட்டியில், ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் (Open Space Foundation (OSF) உத வியோடு தமிழ்நாட்டில் இருந்து ஒரு குழுவாக கலந்து கொண்டனர். இந்த ஆராய்ச்சி கடந்த 25.10.2024 முதல் 19.11. 2024 வரை நடைபெற்றது. இதில், மாணவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று பிஎஸ்-1 (ps1 ) மற்றும் பிஎஸ்-2 (ps2) தொலைநோக்கிகளில் எடுக்கப்பட்ட படத் தொகுப்பு கள் (Image sets) ஒரு வாரத் திற்கு வழங்கப்படும். அந்தப் படத் தொகுப்புகளில் நான்கு படங்கள் இணைக்கப்பட்டி ருக்கும். இந்த படத்தொகுப்பில் காணப்படும் விண் கற்களை கண்டறிந்து தரவுகளாக (MPC report) சமர்ப்பிக்க வேண்டும். இதில், தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 21 குழுக்கள் கலந்து கொண் டன. அதில், 6 குழுக்கள் வெற்றிகரமாக தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட ஆய்வை செய்து முடித்தனர். அந்த 6 குழுக்களில், பேராவூரணி ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவி யல் மன்றம் சார்பில் பங்கேற்ற வர்களும் ஒரு குழுவாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு NASA, IASC, Pan STARRS மற்றும் OSF இணைந்து சான்றிதழ் கள் வழங்கியது. மேலும், இந்த மாணவர் கள் தீபாவளியின் போது வெடி களில் வெளிப்படும் வாயுக்க ளை சென்சார்கள் மூலமாக அளவிட்டு ஒரு ஆராய்ச்சியை செய்துள்ளனர். மாணவர் செயற்கைக்கோள் உரு வாக்குவதற்கான பணிகளை யும் செய்து வருகின்றனர். புதிய விண்கற்களை கண்டு பிடித்ததன் மூலம் அதற்கான பெயர் சூட்டும் வாய்ப்பையும் இந்த அறிவியல் மன்றம் பெற்றுள்ளது. மேலும், பேராவூரணி பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று தொடர்ந்து அறிவியல் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.