2023 ஆம் ஆணடு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட்டுவதை முன்னிட்டு, ஈச்சங்கோட்டை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஆலடிக்குமுளை அரசு உயர் நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். பள்ளியின் துணைத் தலைமையாசிரியர் துவங்கி வைத்தார். இதில், வேளாண் கல்லூரி மாணவிகள் சிறுதானியங்களின் பயன்கள் குறித்தும், மரங்கள் வளர்ப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.