திருச்சிராப்பள்ளி, ஜூன் 28 - காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, திருச்சி பெரு நகர் வட்டம் சார்பில் வெள்ளியன்று தென்னூ ரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியா ளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலைப்பளு ஒப்பந்தத்திற்கு எதிராக வெளியிட்டுள்ள ReDeployment, Discon tinued உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும். அரசாணை 100 முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள அநீதிகளை கலைந்து அரசு உத்திரவாதத்துடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். மின் வாரியத்தை பல கூறுகளாக பிரித்து தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை கை விட வேண்டும். பணியாளர்கள் மற்றும் ஓய்வூ தியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன் களை காலதாமதமின்றி உடனே வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள் பெறுகிற குடும்ப நல நிதி ரூ.5 லட்சத்தை மின் வாரியத்தி லும் அமல்படுத்த வேண்டும். மின் விபத்தில் உயிரிழக்கும் மின் வாரிய பணியாளர்களுக்கு சிறப்பு நிதி ரூ.10 லட்சம் அறிவித்ததற்கான அரசாணை, வாரிய உத்தரவை வெளியிட வேண்டும். 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கான குழுவை அமைக்க வேண்டும். 1.12.2019-க்கு பின் வாரி யப் பணியில் சேர்ந்தவர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கேங்மேன் ஊர் மாற்றம், கள உதவியாளர் பணிமாற்றம் வழங்க வேண்டும். உள்முகத் தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்ட குருமதேதி (Crucial Date)-ஐ கைவிட வேண்டும். 18.6.2024 நாளிட்ட மத்திய அமைப்பின் கடி தத்தில் உள்ள கணக்கீட்டு பிரிவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார். இதில் வட்டச் செய லாளர் பழனியாண்டி, வட்டப் பொருளாளர் இருதயராஜ், வட்ட துணைத்தலைவர்கள் செல்வராசு, கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர கோட்டச் செயலாளர் ராதா நன்றி கூறினார்.