திருச்சிராப்பள்ளி, ஜூன் 20 -
டாஸ்மாக் கடை அருகே மனமகிழ் மன்றத்திற்கு அனு மதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி டாஸ்மாக் ஊழி யர் சங்கத்தினர் (சிஐடியு) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டாஸ்மாக் ஊழியர்களின் பணியிட பாதுகாப்பை உத்த ரவாதப்படுத்த வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடை களுக்கும் அடிப்படை வசதி களை ஏற்படுத்த வேண்டும். விற்பனை அடிப்படையில் ஊழியர்களை பணிநிரவல் செய்தல் வேண்டும். சுழற்சி முறை பணியிட மாறுதல் கொள்கையை அமல்படுத்த வேண்டும். நிர்வாக கார ணங்களால் மூடப்பட்ட டாஸ் மாக் கடை ஊழியர்களுக்கு கடைப்பணி வழங்க வேண் டும்.
ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் நீண்டகாலம் கிடங்குப் பணியில் உள்ள வர்களுக்கு கடைப்பணி வழங்க வேண்டும். டாஸ்மாக் கடை அருகே மனமகிழ் மன்றத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது. விதிகளுக்கு புறம்பாக செயல்படும் மனமகிழ் மன்றத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை கொண்டு விசாரணையின்றி ஊழி யர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண் டும். குறைதீர்க்கும் கூட் டங்களை முறையாக நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு டாஸ் மாக் ஊழியர் சங்கத்தின் திருச்சி மண்டல அளவி லான கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் செவ்வா யன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ரெங்கராஜன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநிலச் செயலாளர்கள் சி.ஜெய பால், ஏ.ஸ்ரீதர், டாஸ்மாக் சங்க மாவட்டத் தலைவர்கள் ராமானுஜம், சிவக்குமார், வைத்தியநாதன் ஆகியோர் பேசினர். இதில் டாஸ்மாக் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். டாஸ்மாக் சங்க தஞ்சாவூர் மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன் நன்றி கூறினார்.