2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டம் நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர்.ஷாநவாஸ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, மாவட்ட வருவாய் துறை அலுவலர் ரா.பேபி, நாகை நகர்மன்ற உறுப்பினர் இரா.மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.