districts

மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஜூன் 16-  

    பல்கலைக்கழகம், மருத்துவம், மருத்துவம் சார்ந்த,  பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் பள்ளி, ஐடிஐ படித்த, படிக்கும் மாணவ, மாணவிகள், தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் தனிநபர் ஆகி யோர்கான மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி  ரம்யா தெரிவித்துள்ளார்.

    பிரான்ஸில் உள்ள லியான் நகரில் செப்டம்பர் மாதம்  சர்வதேச திறன் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    10 துறைகளில் உள்ள 55 தொழிற்பிரிவுகளில் தங்கள்  தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள  மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப் பிக்க ஜூன் 30 கடைசி நாள் ஆகும். 01.01.1999 அன்றும்,  அதற்கு பிறகும் பிறந்த மாணவ, மாணவிகள், இளை ஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்க தகுதியுடையவர்கள்.  

   எனவே, இதில் பங்கேற்க தகுதிவாய்ந்த விண்ணப்ப தாரர்கள் naanmudhalvan.tn.gov.in/tnskills என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவ ரங்களுக்கு tnskills@naanmudhalvan.in வலைதளத் தினை பார்வையிடலாம்.