districts

திருவாரூரில் கூடுதல் ஓய்வூதியம் கேட்டு தர்ணா

திருவாரூர், ஏப்.18-

  ஓய்வு பெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களது பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திரு வாரூரில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

  தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் குரு.சந்திரசேகரன் தலைமையில் நடை பெற்ற தர்ணாவில், ஆர்.கோவிந்தராஜ், என்.கந்தையன், அமைப்புக்குழுத் தலைவர்கள்  மா.சண்முகம், தி.தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  மாவட்டச் செயலாளர் நி.அழகரசன், கு.வேத ரத்தினம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

  தர்ணாவில், “அகவிலைப்படி உயர்வை நிலுவையின்றி வழங்க வேண்டும்,70 வயதானவர்களுக்கு கூடுதல் ஓய்வூ தியம் பத்து சதவீத வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத்  திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.