திருவாரூர், ஜூன் 4-
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியத்திற்குட் பட்ட அஷேசம் ஊராட்சியில் ரூ.21.55 லட்சம் மதிப்பீட்டில் நூண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம், பிரதம மந்திரி சாலை திட்டத்தின் கீழ் நெம்மேலி நெட்டிக்குளம் சாலை நான்கு கி.மீ. தூரத்திற்கு மேம்பாடு, மேலமரவாக்காடு ஊராட்சித்தொடக்கபள்ளியில் ரூ.32.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடம், குழந்தைகள் மையம் ஆகியவற்றை திருவாரூர் ஆட்சியர் தி.சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சித்தேரி மரவக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய அங்கான்வாடி கட்டடம் கட்டடத்தையும், மரவக்காடு சித்தேரி வாய்க்கால் தூர்வா ரும் பணியையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மரவக்காடு ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தைப் பார்வையிட்ட ஆட்சியர். மறுசீரமைப்புப் பணிகளை விரை வாக முடித்து உரியவர்களிடம் வீடுகளை ஒப்படைக்க அலு வலர்களை அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, மன்னார்குடி ஒன்றியக்குழுத் தலை வர் மனோகரன், வட்டாட்சியர் கார்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.