districts

img

கோரிக்கைகளை நிறைவேற்றாத பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, மார்ச் 9 - தில்லியில் போராடி வரும் விவசாயி களின் கோரிக்கைகளை நிறை வேற்றாத மோடி தலைமையிலான பாஜக அரசைக் கண்டித்து ஐக்கிய விவ சாயிகள் முன்னணி சார்பில் புதுக் கோட்டையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் மு.மாதவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. ராமையன், அ.ராஜாங்கம் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். கோரிக்கை களை விளக்கி இந்திய விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி, விவசாயத் தொழிலாளர் சங்க  மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர் மற்றும்  நிர்வாகிகள் பேசினர். அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதப்படுத்தும் சட்டத்தை இயற்ற  வேண்டும். விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். வளர்ச்சித் திட்டங் களுக்கு விவசாயிகளின் நிலத்தை கை யகப்படுத்தும் போது 4 மடங்கு இழப்பீடு  வழங்க வேண்டும். மின்சார திருத்த மசோதா 2020-ஐ ரத்து செய்ய வேண்டும்.  எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைப்படி விளைபொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முழக்கங்களாக எழுப்பப் பட்டன.