திருவாரூர், நவ.18- திருவாரூர் நகர் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான விளமல், சேந்த மங்கலம், மாங்குடி, மாவூர், கொர டாச்சேரி, கண்கொடுத்தவணிதம், கமலா புரம், கொரடாச்சேரி, என்கண், முகுந்த னூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிக ளில் பரவலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் தெற்கு வீதி, வடக்கு வீதி, கமலாலயம் வடகரை, துர்கால யா சாலை உள்ளிட்ட நகர பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.