பாபநாசம், ஆக.3 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில், கொள்ளிடக் கரையை ஒட்டியுள்ளது கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சியைச் சேர்ந்த பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடி காடு கிராமங்கள். கொள்ளிடத்தில் அதிக தண்ணீர் வரத்தையடுத்து, பட்டுக்குடி காளியம் மன் கோயில் தெருவில் உள்ள ஈமக் கிரியை மண்டபம், பிள்ளையார் கோயில் ஆகியவை நீரில் மூழ்கின. கொள்ளிடத்தில் செல்லும் அதிகப்படி யான நீரால் காய்கறிப் பயிர்களான மிளகாய், வாழை, முருங்கை முழுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், கொள்ளிடக் கரையில் இயங்கி வந்த நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் லட்சக் கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயி கள் கூறுகையில், “வடிகாலான தூரி யாறு பாதியளவுதான் தூர்வாரப் பட்டுள்ளது. பருவமழை தொடங்கும் முன்னர் முழுமையாக தூர்வாரப்பட வேண்டும். இந்த ஊராட்சியில் செல்லும் 5 கிலோ மீட்டர் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டி கள், நடந்து செல்லும் முதியவர்கள், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். சாலையின் இரு புறமும் குடியிருப்பு கள் இருப்பதால், வாகனத்தில் செல்ப வர்கள் சற்று தடுமாறினால்கூட கீழே விழ நேரிடும். இதனால் எம்.பி, எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்த சாலையை தரமாக அமைக்க வேண்டும்” என்றனர். மாவட்ட ஆதிதிராவிடர் (ம) பழங்கு டியினர் நலத் துறை துணை ஆட்சியர் முத்து கிருஷ்ணன் பட்டுக்குடி, கூடலூ ரில் கொள்ளிடம் நீரால் ஏற்பட்ட பாதிப்பை நேரில் ஆய்வு செய்தார். வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்கக் கூடிய சமுதாயக் கூடத்தையும் பார்வையிட்டார். செங்கல் சூளையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தினார். ஆய்வின் போது ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர், ஒன்றி யக் கவுன்சிலர் சுமதி ஆகியோர் உட னிருந்தனர்.