புதுச்சேரி, ஜூலை 2- கால்நடை தீவனத்திற்கான மானியத்தை ஆண்டு முழுவதும் வழங்கிட வேண்டுமென்று புதுச்சேரி அரசை பால் உற்பத்தியாளர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தில் இணைக்கப்பட்டுள்ள புதுச்சேரி பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில தலைவர் இரகு. அன்புமணி, செயலாளர் சீ. பத்மநாபன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுவை அரசு, புதுவையில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த காலங்களில் பசுவின் கறவை காலம் வரை யில் மானிய விலையில் தீவனம் வழங்கி வந்த நிலையில் அதை குறைத்து சில ஆண்டு களாக ஆண்டொன்றுக்கு மூன்று மாதத்திற்கு மட்டும் அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் மட்டும் 75விழுக்காடு தீவன மானியம் அனைத்து வகுப்பைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இப்பொழுது அதுவும் குறைந்து ஆதிதிரா விடர் வகுப்பை சேர்ந்த பால் உற்பத்தி யாளர்களுக்கு மூன்று மாதம் என்பதை இரண்டு மாதம் மட்டுமே வழங்கப்படும் என்றும் ஆனால் மானியம் 75 விழுக்காட்டி லிருந்து 92 விழுக்காடாக உயர்த்தி, மாதத்தை குறைத்து மானிய விழுக்காடு ஏற்றி உள்ளதாக ஏமாற்றுவது மட்டுமல்ல, ஆதி திராவிடர் பால் உற்பத்தியாளர்களை புதுவை அரசு வஞ்சிக்கிறது. மறுபுறம் பின்தங்கிய பால் உற்பத் தியாளர்களுக்கும் மூன்று மாதம் மானியம் என்பதை சுருக்கி ஒரு மாதம் மட்டும் மானியம் என குறைத்தது. அது மட்டுமின்றி 75 விழுக்காட்டில் வழங்கி வந்த மானியத்தை 52 விழுக்காடாக குறைத்துள்ளனர். இவ்விரண்டு நடைமுறைகளும் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. என்பது பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும்,கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பாரபட்சமான அணுகுமுறையை உடனடியாக திரும்பப்பெறுவதுடன் ஆண்டு முழுவதும் தீவனம் சாப்பிடும் பசுக்கள் ஏதோ வருடத்திற்கு மூன்று மாதங்கள் மட்டுமே சாப்பிடும் என நினைத்து மூன்று மாதம் மட்டுமே மானியம் வழங்கப்படுவது கண்டனத்திற்கு உரியதாகும். மேலும் பன்னிரண்டு மாதங்களுக்கும் தீவன மானியம் வழங்க வேண்டும் என தொடர்ந்து புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் புதுவை அரசை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகிறது ஆனால் புதுவை அரசு இதுகுறித்து செவிசாய்க்கா மல் உள்ளது. இந்த சூழ்நிலையில் மானியம் வழங்கி வந்த மாதத்தையும் குறைத்து மானிய விழுக்காட்டையும் குறைத்தது என்பது புதுவையில் தற்போது உள்ள பால் தட்டுப் பாட்டை சரிசெய்ய உதவாது. மாறாக வெளி மாநிலங்களில் இருந்து பாலை கொள்முதல் செய்து அதில் ஆட்சியாளர்களும், அதிகாரி களும் ஊழல் செய்வதற்கே வழிவகுக்கும் என்பதை புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கண்டனத்தை பதிவு செய்கிறது. குறைத்த மானியத்தை ஏற்றித் தரவும் ஆண்டு முழுவதும் மானியத்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் . இவ்வாறு அச்செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.