districts

img

பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: ஆசிரியரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூன் 25- அனுபவ விவசாய நிலங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்ற முயற்சிக்கும் இந்து அறநிலையத்துறையின் நடவடிக் கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட் டம், ஜெர்த்தலாவ் ஊராட்சிக்குட்பட்ட திம் மனஹள்ளி கிராமத்தில் வெங்கட்ரமண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான மானிய நிலத்தை, கடந்த 33 ஆண்டுகளாக குத்தகை பதிவு சட்டத்தின் படி பதிவு செய்து, தனது தாத்தா, அப்பா விற்கு பிறகு, தற்போது கிருஷ்ணன் என் பவர் விவசாயம் செய்து வருகிறார். இந் நிலையில், சிலரின் தூண்டுதலின்படி, இந்து அறநிலைத்துறையின் மூலமாக கோவில் நிலம் பொது ஏலத்திற்கு விடப்படுவதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விவசாயி கிருஷ்ணன் பக்கம் சட்ட உரிமை உள்ளது. இச்சூழலில் இந்து அறநிலையத்துறை ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு, விவ சாயியை அனுபவ நிலத்திலிருந்து வெளி யேற்ற முயற்சித்து வருகிறது. இதனைக் கண்டித்தும், விவசாயிகளின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என வலியுறுத்தி யும் மார்க்சிஸ்ட் கட்சியினர் புதனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சி யின் வட்டக்குழு உறுப்பினர் பி.கோவிந்த சாமி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து, வட்டச் செயலாளர் பி.கார்ல் மார்க்ஸ், மாவட்டக் குழு உறுப்பினர் சி.கலாவதி, வட்டக்குழு உறுப்பினர்கள் பி.ஜெயராமன், ஏ.சேகர், என்.வரதராஜன், பி.முருகன், ஜி.பாண்டி யம்மாள், சி.ராஜா, கே.எம்.முருகேசன், வி. உதயகுமார், ஜி.நக்கீரன், பி ஆறுமுகம், இ.எம்.கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.