districts

img

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 27-  

     மோடி தலைமையிலான ஒன் றிய அரசு மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை உருவாக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

    கட்சியின் ஒன்றியச் செயலா ளர்(பொறுப்பு) எம்.ஜோதி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ். சங்கர், கே.சண்முகம், மாவட்டக்  குழு உறுப்பினர்கள் டி.சலோமி, கி.ஜெயபாலன், ஒன்றியச் செயலா ளர் எம்.ஆர்.சுப்பையா உள்ளிள் டோர் கண்டன உரையாற்றினர்.  

     ஒன்றிய அரசு இரவு நேர மின்  சாரப் பயன்பாட்டிற்கான கட்டண உயர்வு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். பலவகையான புறம் போக்குகளில் குடியிருந்துவரும் ஏழை மக்களுக்கு உரிய வகை மாற்றம் செய்து மனைப்பட்டா வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத் தில் சட்டப்பூர்வ கூலி ரூ.294-ஐ முழு மையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.