நாகப்பட்டினம், ஜன.3 - கொரோனா நோய்க் கிருமியானது ஒமைக் ரான் என உருமாற்றம் அடைந்து, தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. அதனையொட்டி மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பல்வேறு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப் பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் வேகமாக பரவக்கூடியது என்பதால், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே ஒரே தீர்வாக இருக்கிறது. இந்தியா முழுவதும் 3.1.2022 முதல் 15 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு கொ ரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட் டுள்ளது. சென்னையில் தமிழக முதல்வர் 3.1. 2022 அன்று துவக்கி வைத்தார். இந்நிலையில் நாகப்பட்டினம் நடராஜன் தம யந்தி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாண வர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ். நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 64 ஆயிரம் மாணவ, மாணவிய ருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது என்றார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 15 வயது முதல் 17 வயது வரையுடைய மாணவ - மாணவியர்க ளுக்கு தமிழக அரசின் சிறப்பு கொரோனா தடுப்பூசி திட்டத்தினை தொடங்கி வைத்து அவர் பேசுகையில், ஆலங்குடி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் 15 வயது முதல் 17 வயது வரையு டைய மாணவ - மாணவியர்களுக்கு தமிழக அர சின் சிறப்பு கொரோனா தடுப்பூசி திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பெருந்தொற்று உரு மாறிய கொரோனாவாக ஒமிக்ரான் எனும் புதிய வடிவில் பரவலாக காணப்படுகிறது. இவ்வாறான உருமாறிய வைரஸ்களின் தாக்குதல்களிலி ருந்து பாதுகாத்திட கொரோனா தடுப்பூசி மட்டுமே பாதுகாப்பானதாகும். மாவட்டத்தில் 3.1.2022 முதல் 8.1.2022 வரை நடைபெறும் சிறப்பு முகாம்க ளில் 15-17 வயது வரையுடைய அனைத்து பள்ளி செல்லும் இளம் சிறார்களுக்கும் கோவாக்சின் தடுப்பூசி அந்தந்த பள்ளிகளிலேயே வழங்கப்பட உள்ளது என்றார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.சத்தியமூர்த்தி, வருவாய் கோட்டாட் சியர் அபிநயா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.அர்ஜுன்குமார், ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழ கன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 26,100 மாணவ, மாணவி களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி திங்களன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தடுப்பூசி செலுத்தும் பணிகளை துவக்கி வைத்தார். பெரம்ப லூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதார துறை யும் கல்வித் துறையும் இணைந்து பள்ளி வளாகம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களின் மூலம் மருத்துவ குழுக்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற் பார்வையில் 15 முதல் 18 வயது உள்ள மாண வர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. விடுபட்ட மாணவ, மாணவிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினசரி நடக்கும் முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். எஸ்.சிவசங்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட மாணவி களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் மற்றும் திருக்குறள், அகராதி பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.