மயிலாடுதுறை, ஜூலை 2 - மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் மேலா ளராக பொறுப்பு வகித்து ஞாயிறன்று ஓய்வு பெற்ற சிஐடியு மாவட்டக் குழு உறுப்பின ரும், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேள னத்தின் மாநிலக் குழு உறுப்பினரும், கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவரும், அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் சங்கத்தின் மயிலாடுதுறை ஒன்றியத் தலைவருமாகிய யூ.ராஜேந்திரனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. திங்களன்று மாலை திருவிழந்தூர் ஸ்ரீநாராயணன் திருமண மண்டபத்தில் நடை பெற்ற விழாவிற்கு, தமிழ்நாடு அரசு கூட்டுற வுத் துறை மாநிலச் செயலாளர் இரா.சிவபழனி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் து. இளவரசன், வட்ட துணைத் தலைலர் கோ. வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் எம். கலைச்செல்வன் வரவேற்றார். கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் நாகைமாலி, தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செய லாளர் என்.ஆர்.ஆர். ஜீவானந்தம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் ஆகி யோர் வாழ்த்தி உரையாற்றினர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், சிஐ டியு மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கணேசன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் வ. பழனிவேலு, சிஐடியு மாவட்டப் பொருளா ளர் ஆர்.ராமானுஜம் மற்றும் கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள், ஊழி யர்கள் வாழ்த்தி உரையாற்றினர். கூட்டுறவுத் துறையில் 1984 இல் விற்பனை யாளராக பணிக்கு சேர்ந்து 40 ஆண்டுகள் பணியாற்றிய தோழர் ராஜேந்திரன், நேர்மை யாகவும், கூட்டுறவுத் துறை வளர்ச்சியடைய உண்மையாகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.