குடவாசல், மே 7- வலங்கைமான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினரும், அரசு ஓய்வூதியர் சங்க வட்ட கிளை செயலாளரும், தீக்கதிர் நாளிதழ் விநியோகஸ்தருமான மறைந்த தோழர் சி.கருப்பையன் நினைவு கல்வெட்டு, படத்திறப்பு கொடியேற்றும் நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வலங்கைமான் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.இராதா தலைமை வகித்தார். தோழர் சி.கருப்பையன் நினைவு கல்வெட்டை கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி திறந்து வைத்தார். தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் செங்கொடி ஏற்றினார். ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பழ.அன்புமணி தோழர் சி.கருப்பையன் படத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.எஸ்.கலியபெருமாள், டி.முருகையன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.சுப்பிரமணியன், கே.எஸ்.செந்தில், அங்கன்வாடி சங்க மாவட்டத் தலைவர் ஏ.பிரேமா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக தோழர் சி.கருப்பையன் துணைவியாரிடம் குடும்ப நிதி வழங்கப்பட்டது.