திருச்சிராப்பள்ளி, ஜன.22- திருச்சி துவாக்குடி அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி நேரம் மாற்றப் பட்டுள்ளதால் மாணவர்களுக்கு போதிய பேருந்துகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு முன்பு வரை காலை நேரத்தில் ஒரு பகுதி மாணவர்களும் மதியம் ஒரு பகுதி மாணவர்களும் வந்து கொண்டிருந்தனர். தற்போது கல்லூரி நிர்வாகம் காலையில் மட்டும் கல்லூரி நடைபெறுவதைப் போல நேரத்தை மாற்றி உள்ளது. இந்த நேரத்தில் மாண வர்கள் கல்லூரிக்கு வருவதற்கும் கல்லூரி முடிந்து செல்வதற்கும் போதிய பேருந்துகள் இல்லை. இத னால் பேருந்து படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையை தவிர்க்க கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்து களை இயக்க வேண்டும் என்று வலி யுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத் தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு மாணவர் சங்க திருச்சி புறநகர் மாவட்ட தலை வர் வைரவளவன் தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலாளர் ஜி.கே.மோகன், மாநிலக் குழு உறுப்பினர் சூர்யா, மாவட்ட செயலாளர் ஆமோஸ் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.