தஞ்சாவூர், ஏப்.18 -
டாஸ்மாக் துறை அமைச்சர் பெய ரைக் கூறி, தஞ்சாவூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ஊழியர்களிடம் கட்டாய வசூல் செய்யும் இடைத்தர கர்களைக் கண்டித்து செவ்வாய்க் கிழமை டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் ரயில்நிலையம் அருகே மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐ டியு) சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டத் துணைச் செயலாளர் கே.அன்பு தலைமை வகித்தார். மாநி லச் செயலாளர் சி.ஜெயபால், டாஸ்மாக் ஊழியர் (சிஐடியு) மாநில சம்மேளன பொதுச் செயலாளர் கே.திருச்செல் வன், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மதியழகன், மாவட்டப்பொரு ளாளர் ஏ.ஜி.பன்னீர்செல்வம், ஜெக தீசன், ரவிச்சந்திரன், ஜெயபிரகாஷ், காமராஜ், இளங்கோவன், ஜெயரா மன், அருள் போனிபாஸ் சிஐடியு நிர்வா கிகள் து.கோவிந்தராஜ், இ.டி.எஸ் மூர்த்தி, பி.என்.பேர்நீதி ஆழ்வார், ஏ.ராஜா, கே. பாலகிருஷ்ணன், ரஜினி, பி.வெங்கடேசன், அதிதூத மைக்கேல் ராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர்.
ஆர்ப்பாட்டத்தில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை களில், டாஸ்மாக் துறை அமைச்ச ரின் பெயரைப் பயன்படுத்தி ஊழியர் களிடம் தினமும் கட்டாய வசூல் செய்யும் இடைத்தரகர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதற்குத் துணை போகும் தஞ்சாவூர் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் புரோக்கர் களுக்கு ஆதரவாகச் செயல்படும் இள நிலை உதவியாளர்களை இடமாற்றம் செய்ய வேண்டுமென” வலியுறுத்தப் பட்டது.