districts

img

பட்டுக்கோட்டை அருகே மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

தஞ்சாவூர், ஆக.19 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட, பட்டுக் கோட்டை அருகே உள்ள கொண்டிக்குளம் அன்பு திருமண மண்டபத்தில், ‘மக்களு டன் முதல்வர்’ சிறப்பு முகாம் திங்கள் கிழமை நடைபெற்றது.  இதில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு, அரசுத் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.  இந்நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை வரு வாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, வட்டாட்சி யர் சுகுமார், பட்டுக்கோட்டை ஒன்றியப் பெருந்தலைவர் பழனிவேல், துணைப் பெருந்தலைவர் முருகானந்தம்,  மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அலிவலம் அ. மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் சு.ராஜாத் தம்பி (பண்ணவயல்), சு.பாஸ்கரன் (கொண்டிக்குளம்), அன்பு ரோஜா (நடு விக்கோட்டை), பார்த்தசாரதி (கார்காவ யல்), கொண்டிக்குளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீர.சரவணன்,  மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  இதில், கிராம பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய நூற்றுக்கணக் கான மனுக்களை அரசு அலுவலர்களிடம் வழங்கினர்.