கொரோனா தொற்றுப் பரவல் உணவகங்களை கடுமையாகப் பாதித்துள்ளது. தொற்றுப் பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் சுமார் 30ஆயிரம் உண வகங்கள் மூடப்பட்டுவிட்டன. கொரோனா பரவலால் உணவகங் களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே இதற்குக் காரணம் என்கிறார் சென்னை யைச் சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர். தற்போது கொரோனா மூன்றாவது அலை உருவாகியுள்ள நிலையில் உணவகங்களுக்கு எதிராக கடும் நட வடிக்கை எடுக்க வேண்டாம். 50 சதவீதம் பேர் மட்டுமே உணவகங்களில் அமர்ந்து உணவருந்தலாம் என்ற முடிவையும் மறு பரிசீலனை செய்யுமாறு மாநில அரசை உணவகம் நடத்துவோர் வலியுறுத்து கின்றனர். சென்னையில் உணவகம் நடத்தி வரும் கந்தர்வ் திங்ரா கூறுகையில், “தொற்றுநோய் பரவலால் தாம் நடத்திய பத்து உணவகங்களில் ஐந்தை மூட வேண்டியிருந்தது. இதனால் கிட்டத்தட்ட ரூ.30 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது
கடைசி முயற்சியாக கிளவுட் கிச்சனை தொடங்கியுள்ளேன் என்கிறார். 2018- ஆம் ஆண்டு சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்ற உணவான “ட்விஸ்டி டெயில்ஸ்” ஐத் தொடங்கிய ரேகா டாண்டே, இரண்டு ஊரடங்கால் ரூ. 60 லட்சத்தை இழந்துவிட்டதாகக் கூறுகிறார். தற்போது மூன்றாவது அலை அவரை அச்சுறுத்தி வருகிறது. இது குறித்துப் பேசிய ரேகா டாண்டே, “வெவ்வேறு நகரங்களில் ஆறு கடை களைத் திறக்க நாங்கள் திட்டமிட்டி ருந்தோம். கொரோனாவால் அது சாத்திய மாகவில்லை. அவற்றை மீண்டும் தொடங்குவதற்கான திட்டம் எதுவும் இல்லை.” என்றார். கொரோனா பரவலில் ஸ்விகி, சோமேட்டோ நிறுவனத்தினர் வணிகத்தில் புதிய உயர்வைச் சந்தித்துள்ளனர். ஆனால் உணவகங்கள் இழப்பைச் சந்தித்துள்ளன. 2020- ஆம் ஆண்டு முதல் தொற்றுநோய் காரணமாக தமிழகம் முழுவதும் குறைந்தது 30 ஆயிரம் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால் 50 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். வருவாய் இழப்பால் தொழில் முடங்கியிருந்தாலும், உணவக உரிமையாளர்கள் கடை வாடகை, சம்பளம் மற்றும் வாங்கிய கடன் ஆகியவற்றை கண்டிப்பாக தவறாது செலுத்த வேண்டி யுள்ளது. எனவே மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டாம். உணவகங் களின் நிலையையும் கருத்தில் கொள்ளுங்கள் என தமிழக அரசை உணவக உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.